நடிகர் விஜய் மக்கள் சேவையில் ஈடுபடுவதற்காக விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்களுக்கான ஒரு அமைப்பை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் விஜய் நீண்ட காலமாக அரசியலில் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் தேர்தலை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் இடம் நடிகர் விஜய் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

நாடாளுமன்றத் தேர்தல் தற்போது நெருங்கும் நிலையில் சரியான நேரம் பார்த்து விஜய் காத்துக் கொண்டிருக்கிறார். அதன் முதல் கட்டமாக கட்சியை பதிவு செய்யும் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக தெரிகின்றது. அந்த கட்சிக்கு தமிழக முன்னேற்ற கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.