சென்னையில் சிவந்தி ஆதித்தனாரின் 10ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது நினைவில்லத்தில் மரியாதை செலுத்திய சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

விஜய் அரசியலை நோக்கி வருவது நன்றாகவே தெரிகிறது. அரசியலுக்கு வரட்டும், அதை அனைவரும் வரவேற்க வேண்டும் எனத் தெரிவித்தார். நான் ஒரு தனித்த பேரியக்கம், எனக்கு ஒரு கனவு இருக்கிறது. நாங்கள் அடிப்படை மாற்றத்தை விரும்புகிறோம். எங்கள் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு வருபவர்கள் உடன் இணைந்து பயணிப்போம். மேலும், தனிப்பெரும் இயக்கமாக வளரும் நாம் தமிழர் கட்சியை விஜய் ஆதரிக்க வேண்டும் என்றார்.