இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் மதுரையைச் சேர்ந்தவரான சச்சின் சிவா சென்னையிலிருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று (ஏப்.18) இரவு கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் SETC-க்கு சொந்தமான TN01 AN3213 என்ற பதிவெண் கொண்ட கழிப்பறை வசதியுடன் கூடிய பஸ்ஸில் ஏறியுள்ளார்.

இந்நிலையில் நடத்துனர் இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை என சொல்லி அவரை ஏறக்கூடாது என்று கூறியுள்ளார். அதற்கு சச்சின் சிவா, இது போன்ற பஸ்களில் பயணிப்பதற்கு அனுமதி இருக்கிறது என பதில் அளித்துள்ளார்.

உடனே நடத்துநர் சிவாவிடம், முகத்தை உடைத்துவிடுவேன். அதுமட்டுமின்றி எனக்கு எல்லாம் தெரியும் என கூறி மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. அதோடு இதுகுறித்து கேட்டபோது அப்படித்தான் பேசுவேன். உன்னை வண்டியில் ஏற்ற முடியாது என நடத்துனர் கூறிவிட்டார். அதனை தொடர்ந்து சச்சின் சிவா கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் அதே பஸ்ஸின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.