திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற தவெக தலைவர் விஜய்யின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, “வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் மக்களை நேரில் சந்திக்க முடியாது. பாஜக கூட்டணி வைக்க வேண்டிய அவசியமோ, தேவையோ திமுகவிற்கு இல்லை. மக்களுக்கு எந்த அளவுக்கு தொந்தரவு கொடுக்க முடியுமோ அதை பாஜக கூட்டணியே செய்து வருகின்றது.

கூட்டங்களை கலைக்க ஆம்புலன்ஸ் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமும் எங்களுக்கு கிடையாது” எனக் குறிப்பிட்டார்.