தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மரணம் தமிழக மக்கள் மத்தியில் பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விஜயகாந்து மறைவுக்கான காரணத்தை அவரது மகன் சண்முக பாண்டியன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அதாவது அப்பாவுடன் பல வருடங்கள் நட்பாக பழகியவர்கள் அவரால் வளர்ந்து நல்ல நிலைமைக்கு வந்தவர்கள், எம்எல்ஏவாக இருக்கும்போது கட்சி தாவி அதிமுகவில் சேர்ந்தனர். அந்த துரோகங்களை தாங்க முடியாமல் அப்பா மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். இதனால்தான் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதாக வேதனை தெரிவித்துள்ளார்.