தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 10 முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் மூலம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ள நிலையில் அதற்கான டோக்கன்கள் இன்று முதல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்கும் வகையில் பி ஓ எஸ் எந்திரம் மூலம் விரல் ரேகையை பதிவு செய்த பிறகு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் விரல் ரேகை சரியாக பதியவில்லை என்றால் அந்த ரேஷன் அட்டைதாரர்களின் கையொப்பத்தை பெற்ற பிறகு பரிசு தொகுப்பு விநியோகம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.