விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய அவர், கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாங்க முடியாமல் கண் கலங்கி அழுந்தார் சூர்யா. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாதது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான். அவரைப் போல யாரும் இல்லை. எப்போதும் அவரின் நினைவு இருக்கும் என்றார்.

இதனை பார்த்த நெட்டிசன்களோ ஒரு வாரம் கழித்து அதுவும் இந்தியா வந்ததுக்கு பிறகு மூன்று நாட்கள் கழித்து விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து சூர்யா அஞ்சலி செலுத்துவது நடிப்பு என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.