கர்வத்திலிருந்து நான் எப்போதோ விடுபட்டுவிட்டேன் என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இசைஞானி இளையராஜாவும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், என்னை எல்லோரும் இசைஞானியாக நினைக்கிறார்கள். அதிலிருந்து நான் எப்போதோ விடுபட்டுவிட்டேன்.

ஒரே நேரத்தில் 3 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். உலகிலே 3 நாட்களில் 3 படங்களுக்கு இசையமைத்தது நான்தான். இப்போ எல்லாம் ஒரு பாட்டுக்கு 6 மாசம், ஒரு வருசம் டைம் எடுத்துக்கொள்கின்றனர் என்றார்.