தமிழ் சினிமாவில் விஜயுடன் நண்பன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை இலியானா. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்த நிலையில் தற்போது இவர் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது பிரசவத்திற்கு பிறகு கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக இலியானா தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு நானும் எனது கணவரும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டோம்.

பிரசவத்திற்கு பிறகு நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். அந்த நேரத்தில் கணவர் என்னை ஆதரித்தார். நன்றாக ரெஸ்ட் எடுக்க சொன்னார். அவர்தான் குழந்தையை பார்த்துக் கொண்டார் என்று இலியானா தெரிவித்துள்ளார். இலியானா -மைக்கேல் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தையை பெற்றெடுத்தது அனைவருக்கும் தெரிந்ததுதான்.