விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சீசனை விட இந்த சீசன் மிகவும் பரபரப்பாகவும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 91 நாட்களைக் கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் பூர்ணிமா 16 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டே வீட்டிலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. எப்படியும் இறுதி வரை வீட்டில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பூர்ணிமா தற்போது வெளியேறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.