தேமுதிக  தலைவர் விஜயகாந்த் இருமல் மற்றும் சளி தொல்லை காரணமாக நேற்று முன்தினம் மாலை சென்னை மியாமட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் நலமுடன் இருக்கிறார். தயவுசெய்து கேப்டன் உடல்நிலை குறித்து அவதூறு செய்திகளை வெளியிட வேண்டாம். சிகிச்சை முடிந்த இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என தகவல் தெரிவித்துள்ளார்.