திமுகவை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்று அவர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அட்டைகளை விஜயபாஸ்கர் வழங்கினார். அதன் பிறகு விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் திமுகவின் மக்கள் விரோத போக்கை ஒவ்வொரு வீடாக கொண்டு சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.