தமிழகத்தில் ஆவின் மூலமாக தனியார் நிறுவனங்களின் விலையை விட குறைந்த விலையில் பனீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது 100 கிராம் பனீர் 120 ரூபாய்க்கும், 500 கிராம் பனீர் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து ஆவின் பனீர் விற்பனையை அதிகரிப்பதற்காக சிறப்பு தள்ளுபடி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நவம்பர் 22 முதல் டிசம்பர் 31 வரை 200 கிராம் ஆவியின் பன்னீர் 110 ரூபாய்க்கும், 500 கிராம் 225 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.