தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து அடிக்கடி சில வதந்திகள் பரவி வரும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்துக்கு அவ்வபோது செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் சாதாரண பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனைக்கு சென்று இருப்பதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவருக்கு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.