விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் விஜயகாந்தின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறினார். அவர் அளித்த இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் பலரும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் நான் நலமுடன் இருக்கிறேன் சென்னையில் நாளை தொண்டர்களை சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.