சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிந்து விடுவார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ஜோதிடர் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வருங்காலத்தில் பிரிவது உறுதி என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். யூடியூபில் ஜோதிடர் வேணு சுவாமி ஆந்திரா மற்றும் தெலுங்கானா பிரபலங்கள் குறித்து கூறிவரும் நிலையில், சமந்தா நாக சைதன்யா விரைவில் விவாகரத்து செய்து பிரிந்து விடுவார்கள் என்று கூறியிருந்தார்.

அதனைப் போலவே அவர்கள் விவாகரத்து பெற்ற பிரிந்து விட்ட நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் எதிர்காலத்தில் பிரிந்து விடுவார்கள் என்று அவர் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இது நடக்காவிட்டால் நான் ஜோதிடத்தை விட்டு விடுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.