பிரபல மலையாள இசையமைப்பாளர் கே.ஜே ஜாய் இன்று அதிகாலை காலமானார். பக்கவாதம் காரணமாக படுத்த படுக்கையாக இருந்த இவர் இன்று காலமானார். திருச்சூர் நெல்லிக்குன் பகுதியை சேர்ந்த இவர் 1975 ஆம் ஆண்டு காதல் கடிதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள நிலையில் மலையாளத்தின் முதல் டெக்னோ இசையமைப்பாளர் என்று வர்ணிக்கப்பட்டவர். தென்னிந்திய சினிமாவில் முதன் முதலில் அதாவது மலையாள சினிமாவில் 70களில் கீபோர்டை பயன்படுத்தியவர் என்ற பெருமை இவருக்கு சேரும். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.