தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு சமந்தா சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். தற்போது மயோசிடிஸ் நோய் சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து விலகி ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சமந்தா தனது திருமண வாழ்க்கை குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சமந்தா, கடினமான சூழ்நிலைகளில் இருந்து மதிப்புமிக்க பாடங்களை கற்றுக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்த பின்னரே எனது தனிப்பட்ட வளர்ச்சி தொடங்கியது என்று கூறினார். தற்போது சமந்தா தனது உடல் நிலையில் கவனம் செலுத்தி வருகின்றார்.