அன்னபூரணி’ பட விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்தார். கடவுள் ராமர் குறித்து அன்னபூரணி படத்தில் இடம்பெற்றிருந்த வசனத்திற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாக அப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது படக்குழுவின் நோக்கமல்ல, எங்களை அறியாமலேயே சிலரது மனதை புண்படுத்தி இருப்பதாக உணர்கிறோம். மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் நான், ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் எனக்கோ, படக்குழுவுக்கோ இல்லை  தற்போது இந்த விவாகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார். அவருடைய அந்த அறிக்கையில் “ஜெய் ஶ்ரீ ராம்” என குறிப்பிட்டுள்ளார்.