சமூக வலைதளங்களில் அவ்வப்போது விசித்திரமான உணவு முறைகள் குறித்த வீடியோக்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் நூடுல்ஸ், ஐஸ்கிரீம் மற்றும் இட்லி ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு வினோதமான உணவு கலவையை உருவாக்கியுள்ளார்.
மேலும் ஒரு வாழை இலையில் நூடுல்ஸ் வைக்கப்பட்டு, அதன் மேல் ஐஸ்கிரீம் மற்றும் அருகிலேயே இட்லியும் வைக்கப்பட்டிருப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது. முற்றிலும் மாறுபட்ட சுவைகளைக் கொண்ட இந்த உணவுகளை ஒன்றாகச் சேர்த்து உண்பது போன்ற இந்தக் காட்சி, இணையவாசிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Even aliens would vomit just looking at this 🤮🤮 pic.twitter.com/5up1JSOviJ
— venuswamy parody (@paulesupaadham) December 17, 2025
“>
இந்த விசித்திரமான உணவு பரிசோதனையைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது கோபத்தையும் கிண்டலையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவிற்கு, “இதனைப் பார்த்தால் ஏலியன்களுக்கே வாந்தி வரும்” என்பது போன்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனையடுத்து இணையத்தில் கவனத்தைப் பெறுவதற்காக உணவுகளை இதுபோன்று வீணடிப்பதையும், ஆரோக்கியமற்ற முறையில் விசித்திரமான காம்பினேஷன்களை உருவாக்குவதையும் மக்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர். ஒருபுறம் இது போன்ற வீடியோக்கள் வேகமாகப் பரவினாலும், உணவின் தரத்தையும் சுவையையும் சிதைக்கும் இத்தகைய முயற்சிகள் தேவையற்றவை என்பதே பலரது கருத்தாக உள்ளது.
