திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பள்ளிக்கூட தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேந்திரன் என்ற மகன் இருந்தார். தந்தை,மகன் இருவரும் கிராம பகுதிகளில் ஜோதிடம் பார்த்து வந்தனர். இந்நிலையில் ராஜேந்திரன் தனது தந்தையிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். நீண்ட நாட்களாக கேட்டும் கணேசன் தனது மகனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்கவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ராஜேந்திரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜேந்திரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.