திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி- அரக்கோணம் சாலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் ஒருவர் சாலை நடுவே படுத்துக்கொண்டு ரகளை செய்தார். அவர் மோட்டார் சைக்கிள், பேருந்து மற்றும் லாரிகளை வழிமறித்து ஆபாசமாக பேசி உள்ளார். இதனால் அந்த பகுதியில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து போக்குவரத்து போலீசார் அந்த நபரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். நாளுக்கு நாள் இது போன்ற சம்பவங்கள் திருத்தணி பகுதியில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.