ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் லாரி டிரைவரான உமாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், ஜோசப் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உமாபதி தனது காரில் தாய்மாமன் வீட்டிற்கு செல்வதற்காக சித்தூர்-புத்தூர் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாலா சமுத்திரம் பால் டைரி அருகே சென்றபோது புத்தூர் நோக்கி சென்ற டிராக்டர் கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. உபாபதி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் டிராக்டர் நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உமாபதியின் உடலை கைப்பற்றி சித்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.