தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக 810 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி 730 பேருந்துகளும், பிப்ரவரி 24ஆம் தேதி 640 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து ஓசூர், பெங்களூர், நாகை ,வேளாங்கண்ணிக்கு 80 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.