தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த ஜனவரி 11ஆம் தேதி தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் சிறப்பாக கொண்டாடினர்.

இந்நிலையில் நேற்று துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் வெளியான நிலையில் நள்ளிரவு மற்றும் அதிகாலை என ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. தமிழகத்தில் முதல் நாளில் துணிவு திரைப்படம் 26 கோடியும் வாரிசு திரைப்படம் 19.43 கோடியும் வசூல் செய்துள்ளது. இரண்டு திரைப்படங்களும் 40 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளன. தமிழகத்தில் இதுவரை முதல் நாள் வசூல்களில் அதிகபட்சம் தொகை இதுதான் என கூறப்படுகிறது.