நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார். தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் படங்களில் சமீப காலமாகவே நடிப்பதை நிறுத்திய இவர் தற்போது ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவருடைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அவ்வப்போது பகிர்வது வழக்கம்.
View this post on Instagram
இந்த நிலையில் நடிகர் ரகுல் பிரீத் சிங் காரிலிருந்து ஒரு ஹோட்டலுக்கு உள்ளே செல்லும்போது அங்கே பத்திரிகையாளர்கள் அவரை போட்டோ எடுக்க காத்திருந்தார்கள். அப்போது காரில் இருந்து வெளியே வந்த அவர் தன்னுடைய வாயை மூடி கொண்டு வேகமாக ஹோட்டலுக்குள் ஓடியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் பலரும் அவருக்கு என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
