திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்று காலை வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகே அய்யப்பன் என்பவர் நாளை நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொது மக்களுக்கு வேட்டி,சேலை வழங்குவதற்காக டோக்கன் விநியோகித்துள்ளார். அந்த டோக்கனை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடியதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசல் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மூன்று பேர் காயமடைந்து மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக அய்யப்பன் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, இந்த துயர சம்பவத்தை கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 பெண்களுக்கு தலா  ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.