சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து தீரன் சின்னமலை, பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் எஸ்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் யுவராஜ் போன்றோர் தரப்பில் வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு போன்ற மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் உள்ள குறைபாடுகள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டி தனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என வாதிட்டுள்ளார்.

மேலும் மின்னணு ஆதாரங்கள் திரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். இதற்கு அரசு பரப்பில் அளித்த பதிலில் மின்னணு ஆதாரங்களை திரிக்கவாய்ப்பில்லை என திட்டவட்டமாக கூறப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த தடவியல் துறை நிபுணர்களை அழைத்து நீதிபதிகள் விளக்கங்களை கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து குற்ற வழக்குகளில் கண்காணிப்பு கேமரா உட்பட மின்னணு ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அந்த வழிகாட்டு விதிமுறைகளை தாக்கல் செய்தால் அதனை இந்த வழக்கின் தீர்ப்புடன் சேர்ப்பதாக கூறியுள்ள நீதிபதிகள் தற்போது கண்காணிப்பு கேமரா பதிவுகள் முக்கியமான ஆதாரங்களாக பயன்படுத்தப்படுகின்ற காரணத்தினால் இந்த நடைமுறைகள் குற்ற வழக்குகள் தீர்வுகான உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். அதன்பின் காவல்துறை மற்றும் கோகுல்ராஜ் தாயார் தரப்புகளின் எதிர்வாதங்களுக்கு வழக்கின் விசாரணையை வருகிற பிப்ரவரி 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.