செல்போனில் ’Good Morning’ செய்தி அனுப்பினால் அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது உங்களிடம் 18% GST வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக இரு ஆடியோ வாட்ஸ் அப்பில் பரப்பப்படுகிறது. ஆனால் இது வதந்தி என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுகுறித்த தகவல் எதுவும் வெளியிடவில்லை.

2018, மார்ச் 2ம் தேதி ’நவ்பாரத் டைம்ஸ்’ எனும் நாளிதழில் வெளியானது என்றும் அந்த செய்திக்குக் கீழே ‘கவலைப்பட வேண்டாம், இது ஹோலி’ என இந்தியில் குறிப்பிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் முன்னதாக பகிரப்பட்ட இந்த செய்திகள் தற்போது தமிழும் வெளியானதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.