தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் RO வாட்டர் பியூரிஃபையரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த வேண்டாம் என்றும் தண்ணீரின் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் மெயின் ஃபில்டர் பழுதாகிவிடும் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.