ஹைதராபாத்தில் பட்டப்பகலில் வாடிக்கையாளர் போல நடித்துப் பெண் ஒருவரின் மங்களசூத்திரத்தைப் பறிக்க முயன்ற நபர், உள்ளூர் மக்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட அதிரடிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு கடையில் இருந்த பெண்ணிடம், ஏதோ பொருள் வாங்குவது போல அந்த நபர் நயமாகப் பேசியுள்ளார்.
மேலும் பெண்ணின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் கொடூரமாகப் பறித்துள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் திருட்டுச் சம்பவத்தின் முழு வீடியோவும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
A young man who entered a cosmetic shop disguised as a customer and tried to snatch a woman’s #gold mangalsutra from her neck and fled the scene took place in under #Uppal police station limits, caught in #CCTV camera.
Locals chased him, caught the accused. pic.twitter.com/X4Yz0fsrwh— Ramana Reddy (@RamanaR69561502) June 20, 2026
“>
இருப்பினும், அந்தப் பெண் சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து போகாமல், துணிச்சலுடன் கூச்சலிட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் நொடிப் பொழுதில் அங்கே திரண்டனர். தப்பியோட முயன்ற அந்தத் திருடனை ஓட ஓட விரட்டி மடக்கிப் பிடித்த மக்கள், அவனுக்கு அங்கேயே ‘தர்மஅடி’ கொடுத்துப் பிரித்து மேய்ந்தனர்.
பின்னர், உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அந்த நபர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
