வாடிக்கையாளர்களுக்கு தொல்லை தரும் SPAM போன் கால்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு டெலிகாம் நிறுவனங்களுக்கு டிராய் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும் டேட்டா பிரச்சனைகள் அதிகம் வருவதால் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்கள் சேவை தரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அதேசமயம் தேவையற்ற மெசேஜ்களை தடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.