பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சர்க்கரை ஆலை நேரு தொடக்கப்பள்ளி, மங்களமேடு டிஇஎல்சி பள்ளி போன்ற இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள் அனைவரும் குறிப்பாக 2024ல் 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் இத்தகைய முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த சனிக்கிழமை நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் 1554 விண்ணப்பங்கள் பெயர் சேர்க்கவும், 89 விண்ணப்பங்கள் பெயர் நீக்கவும், பெயர் திருத்தம் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களுக்காக 863 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

மாவட்ட முழுவதிலும் இதுவரை நடந்த முகங்களில் பெயர் நீக்குவதற்கு 588 விண்ணப்பங்கள், பெயர் சேர்ப்பதற்கு 7158 விண்ணப்பங்கள், பெயர் மாற்றம் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களுக்காக 5247 விண்ணப்பங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 993 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.