தமிழகத்தில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் நாளை துணைமின் நிலையத்தில் மின்வாரியத்தால் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண் 1 , 2, 3 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இதன் காரணமாக ரயில் நகர் பழைய பகுதிகளிலும், எல்ஐசி காலனி பகுதியிலும் உள்ள உயர்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு நவம்பர் 29ஆம் தேதி குடிநீர் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.