தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாக்காளர்களை குறி வைத்து இணையவழி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் கலந்து கொண்டால் பரிசுகள் கிடைக்கும் என பொதுமக்களின் மொபைலுக்கு லிங்குகள் அனுப்பப்படுகிறது. இவற்றை கிளிக் செய்தால் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது போன்ற செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.