தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வெளி மாநிலங்களை சேர்ந்த பலரும் தொழில் ரீதியாக குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இவர்கள் ரேஷன் அட்டை வேண்டி இணையதளத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதன்படி. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்துள்ள 8 கோடி புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு இன்னும் 2 மாதங்களில், ரேஷன் கார்டுகளை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.