தெலுங்கானா மாநிலத்தில் கொத்தக்குடெம் மாவட்டம் தெகுலபள்ளியில் நாய் கடித்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு தாண்டாவை சேர்ந்த முத்தையா மற்றும் அவரின் மகள் சிரிஷா(17) ஆகியோரை அவர்களின் வளர்ப்பு நாய் கடித்துள்ளது. அதனால் முத்தையாவுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் சிரிஷாவுக்கு தடுப்பூசி போடப்படவில்லை.

இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு சிரிஷா வெறி நாய் கடியின் அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஏற்கனவே நிலைமை கைமீறிப் போய்விட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அவர் நேற்று இரவு வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.