விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் வரும் 24ம் தேதி பொது விடுமுறை அறிவிப்க்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருவிழா வருடந்தோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில்  மேல்மலையனுர் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி அம்மாவட்டத்திற்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனி  உத்தரவிட்டுள்ளார். இந்த  விடுமுறையை ஈடுசெய்ய வரும் மார்ச் 3ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.