2024 இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000 வழங்க வேண்டும். அதிமுக யாரையும் நம்பியும் இல்லை, அதிமுக தான் பல கட்சிகளுக்கு உதவியாக இருக்கிறது. திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் இன்னும் சில நாட்களில் காணாமல் போகும். மக்களை பாதிக்கும் எந்த பிரச்சனைக்கும் திமுக கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை என்றார்.

மேலும் இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என்றார். அப்போது 2024ல் பாரதிய ஜனதா கூட்டணி தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, அந்தந்த சூழ்நிலைக்கு தக்கவாறு கூட்டணி அமைத்தோம். இப்போது நாங்கள் கூட்டணியில் தான் இருக்கிறோம். எங்களோடு தான் இருக்காங்க. நேற்றைய தினம் கலந்துக் கிட்டாங்க. அவர்களும் பேசினாங்க, இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவிச்சாங்க. எனவே எங்களது கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.