டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருக்கிறது. டெல்லி அரசு அதிகாரத்தை குறைக்கும் வகையில் NCCSA அவசர சட்டத்தை பாஜக அரசு இயற்றி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள APP, டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்துகொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் என அறைக்கூவல் விடுத்துள்ளது.