2022 ஆம் ஆண்டு யு பி எஸ் சி நடத்திய குடிமைப்பணி தேர்வுகளில் இறுதி முடிவுகள் வெளியாகி உள்ளன. 2022 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் முதல் நான்கு இடத்தை பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 180 ஐஏஎஸ் மற்றும் 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1022 இடங்களுக்கு நடந்த தேர்வில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் இஷிதா கிஷோர் என்ற பெண் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.