ஐநாவின் உலக வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 ஆம் ஆண்டு அறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் கடல் நீர்மட்ட உயர்வும் வரலாற்றிலேயே புதிய உச்சத்தில் உள்ளது. இதற்கு உலகின் சராசரி வெப்பம் அதிகரித்து வருவது தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போக்கு மனித குலத்திற்கு ஆபத்தானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.