உகாண்டாவை சேர்ந்த 70 வயதான சஃபினா நமுக்வயா என்ற பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். செயற்கை முறை கருத்தரித்தல் முறையின் மூலம் கருவுற்று சிசேரியன் மூலம் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் மாதவிடாய் நின்று கருவுறுதலுக்கான வாய்ப்பு குறைந்து விடும். ஆனால் மருத்துவத்துறையில் வளர்ச்சியால் 70 வயது மூதாட்டியின் குழந்தை பிறப்பு சாத்தியமாகியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.