ஈரான் நாட்டில் வரலாறு காணாத அளவு அதிக வெப்பம் பதிவாகியுள்ளதால் இன்றும் நாளையும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த இரண்டு தினங்களும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரானின் தெற்கு பகுதியில் பல நகரங்கள் அதிக வெப்பத்தை சந்தித்து விட்டன.

அந்த வகையில் ஈரானின் தெற்கு நகரான அஹ்வாஸில் 123 டிகிரி செல்சியஸ் பாரன்கீட்டை வெப்பநிலை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் “புதன் மற்றும் வியாழன் அதாவது இன்றும் நாளையும் விடுமுறையாக இருக்கும். மருத்துவமனை எச்சரிக்கையுடன் தான் செயல்படும் என்று சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.