கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்துவதால் பல நன்மைகளை பெற முடியும். இருந்தாலும் கிரெடிட் கார்டில் பயன்படுத்தக்கூடிய தொகைக்கு வரம்பு என்பது உள்ளது. அதேசமயம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் அனுமதியுடன் அதனை தாண்டி செல்ல விருப்பத்தை வழங்கலாம். தேவை இல்லை என்றால் செயல் இழக்க செய்யலாம். வாடிக்கையாளருக்கு தெரிவிக்காமல் கூடுதல் வரம்பை அனுமதிக்க அல்லது வசூலிக்க கூடாது என்ற விதிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.