நாகர்கோவில் வடிவீஸ்வரன் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி சில நாட்களாக வயிற்று வலி என கூறிவந்த நிலையில் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் மாணவியிடம் விசாரித்ததில் வீட்டிற்கு அவ்வபோது வந்து சென்ற பிளஸ் டூ மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் இருவரும் நெருங்கி பழகியதாகவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் பிளஸ் டூ மாணவரை POCSO சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அப்போது மாணவன் சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனிடையே எட்டு மாத கர்ப்பிணியான மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.