கிருஷ்ணகிரி மாவட்டம் பஸ்தி பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜெய்சங்கரா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் நந்தகுமார், வாசுதேவ ரெட்டி,  மோப்பு ரெட்டி, உமாசங்கர் ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி இரண்டு தரப்பினருக்கும் இடையே சண்டை வந்துள்ளது.

அப்போது ஜெய்சங்கராவை உமாசங்கர், நந்தகுமார், வாசுதேவ ரெட்டி, மோப்பு ரெட்டி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.