கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் 45 நாட்களை ஆன ஆண் குழந்தையை யாரோ வீசி சென்ற நிலையில் அங்கிருந்தவர்கள் ரோஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு குழந்தைகள் வார்டில் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 45 நாட்களே ஆன குழந்தையை வீசி சென்றது யார் என்றும் இத்தகைய சம்பவத்திற்கு காரணம் என்ன என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்ட குழந்தை திடீரென உயிரிழந்தது.