திருச்சி மாவட்டத்திலுள்ள பூலாங்குடி காலணியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்துள்ளார். இவருக்கு ஆண்டாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதில் ஹரிஹரனுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

மேலும் கடன் தொல்லை அதிகரித்ததால் மன உளைச்சலில் ஹரிஹரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹரிஹரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.