நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

இதுவரை 15 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 16 வது தவணை பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் கேஒய்சி அப்டேட்டை முடித்த விவசாயிகளுக்கு மட்டுமே பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.